புதன், நவம்பர் 02, 2011

நில்லா நினைவு

நில்லென்று சொன்னால்
நீயே நிற்பதில்லை -வரும்
நினைவெங்கே நிற்கும் அன்பே
உனைநீங்கி நில்லென்றால்.




(தமிழன்பன் கவிதை)

திங்கள், அக்டோபர் 31, 2011

பகிர்தல்

உளம் வருந்தி கொடுப்பதும்
உனை வருத்தி பெறுவதும்
இல்லை அன்பே ஆனந்தம்
பகிர்தல் ஒன்றே பரமானந்தம்




(தமிழன்பன் கவிதை) 

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

காதல் கறை

மற என்றால் மறந்துவிட
காரமிட்டு அழித்துவிட
கறையல்ல பெண்ணே-அது
நெஞ்சில் காதல்



(தமிழன்பன் கவிதை) 
MyFreeCopyright.com Registered & Protected