வியாழன், ஏப்ரல் 30, 2009

கோபப்பட்டவன்...


முன்பு
எதற்கெடுத்தாலும்
கோபப்பட்டவன்...
இப்போது
எது நடந்தாலும்
பொறுமையாகவே
இருக்கிறான்
சிறையில்...!

(பத்திரிகையில் படித்த கவிதை)

புதன், ஏப்ரல் 29, 2009

நன்றி

மெழுகுவர்திக்கு
உயிர் கொடுக்க
உயிர் விட்டது தீக்குச்சி..
அதை நினைத்து நினைத்து
உருகியது மெழுகுவர்த்தி..



(எங்கேயோ படித்த கவிதை)

வெள்ளி, ஏப்ரல் 17, 2009

மௌனம்

எப்படியடி
உறங்குவேன்
என் இதயத்துக்குள்
பேர் இரைச்சலை
உண்டாக்குதடி
உன் மௌனம்!


(தமிழன்பன் கவிதை) 

புதன், ஏப்ரல் 15, 2009

நூல்

ஊசியின் முனையில்
கோர்க்க்ப்பட்ட
நூல் புலம்புகிறது
மாட்டிக்கொண்டேன்
என்று...
அதற்கெங்கே
தெரியப்போகிறது
ஏழை மங்கையின்
மானத்தைக்
காக்கப்போகிறது
என்று!

(பத்திரிகையில் படித்த கவிதை)

மலிவு

எல்லா பொருட்களுமே
விலை ஏறிவிட்டது!
மனித உயிர்கள் மட்டும்
மலிவாகவே கிடைக்கிறது
என் தேசத்தின்
தெருக்களில்...


(தமிழன்பன் கவிதை) 

பார்வை

அன்று உன்
பார்வை அலைகளால்
என்னை அடித்தாய்
இன்று என்
இதயப் பாறையில்
நினைவுப் பாசிகள்

 
(எங்கேயோ படித்த கவிதை)

கசந்தேன்

நான் காதல்
கொண்டபோது
வேப்பஞ் சாறும்
இனித்தது
காதலி காதலை
கொன்ற கணத்தில்
தேனும் கசந்தது


(தமிழன்பன் கவிதை)

ஞாயிறு, ஏப்ரல் 12, 2009

இப்படிக்கு

உனக்காக நான்
துடிக்கிறேன்
ஆனால் நீயோ
என்னைத் தவிர
யார் யாரையோ
நினைக்கிறாய்..
இப்படிக்கு,
உன் இதயம்

(கைபேசியில் வந்த கவிதை)

என் கல்லறைக்கு

ஒரு மலரின்
மேல் ஆசைப்பட்டதால்
பல மலர்கள் வந்தன
என்னைத் தேடி
என் கல்லறைக்கு


(கைபேசியில் வந்த கவிதை)

புதன், ஏப்ரல் 08, 2009

மறந்திருப்பேன்


கண் உள்ள வரை
பார்த்திருப்பேன்
காலம் உள்ள வரை
நினைத்திருப்பேன்
என்றோ ஒருநாள்
மறந்திருப்பேன்
அன்று நான்
இறந்திருப்பேன்

(கைபேசியில் வந்த கவிதை)
MyFreeCopyright.com Registered & Protected