வியாழன், ஜூலை 01, 2010

நினைவுகள்

ஆற்றங்கரை அரசமரத்தடி
அணைத்திருக்கும் மணல்மேடு
அருகிருக்கும் உன்னினைவுகள்
ஆனால் நீமட்டும் இன்றில்லை...



(தமிழன்பன் கவிதை) 

மறுபரிசீலனை

மரணதண்டனைக்கு கூட
மறுபரிசீலனை இருக்கிறதே
நீமட்டும் ஏனடி
முடியாதென்கிறாய்....



(தமிழன்பன் கவிதை) 

திங்கள், ஜூன் 21, 2010

தவிப்பு

எங்கே இசைத்தாலும்
நீயே மீட்டுவதாய்
தவிக்குதடி மனது
தர்க்கமே இல்லாமல்- என்
தாளங்களை போலவே...



(தமிழன்பன் கவிதை)

காலம்

கரைகிறது காலம்
உன் நினைவை
மட்டும்
உருகாமல்
உறையவிட்டு...



(தமிழன்பன் கவிதை)

தியானம்

மனதொடுக்கி
நிலைமறந்து
தியானிக்கிறாய் நீ
திசைமாறுதடி
என் திடம்...


(தமிழன்பன் கவிதை)

முரண்

நிழல் சூடானவெயிலாய்
தூறல் பெருமழையாய்
மென்பனி கடுங்குளிராய்
அமைதியான பேரிரைச்சலாய்
நானாக நீ என்னுள்ளே ...


(தமிழன்பன் கவிதை) 

ஞாயிறு, ஜூன் 20, 2010

ஈரம்

நீலம் மறந்த வானம்
நில்லாது தூவும் மழை
குடையில்லாமல் - நீ
நனைந்தபடி என் மனது..



(தமிழன்பன் கவிதை) 

உளவு

உளவறியும்
உன்பார்வையால்
என் களவறிந்து ஊர்
சொல்லும் நீ -என்
உளமறியாததேனோ..?


(தமிழன்பன் கவிதை) 

சனி, ஜூன் 19, 2010

காலம்

எதிர்காலம் நிகழ்காலம் கடந்தகாலம்
என காலங்களை கடந்தகாலம் அன்பே- நீ
எக்காலத்தில் வந்தாயோ நான் அறியேன்
நீ வந்து போனது எனது கஷ்டகாலம்....


(தமிழன்பன் கவிதை) 

புதன், ஜூன் 16, 2010

வழி

பெண்ணழகு இதுவலவோ என நான்
பின்னழகு பார்த்து பின்சென்று பின்
என்னழகை எண்ணி ஒருகணம் நின்று
வழிகண்டு வந்தேன் பின் வந்தவழி....


(தமிழன்பன் கவிதை) 

செவ்வாய், ஜூன் 15, 2010

அவன்

அது எள்ளி நகைத்தது அவனை
அதுகண்டு நகைத்தன-அவைகளும்
தெரிந்திருக்க நியாயமில்லைதான் ஒருநாளில்
வரலாறும் அவன்வாசலில் வாலாட்டுமென்று...


(தமிழன்பன் கவிதை)

திங்கள், ஜூன் 14, 2010

துடிப்பு

உன்நினைவில் விழுந்தமனம்
விடுபடத்தான் துடிக்கிறது
கவிழ்ந்துவிட்ட கரப்பானாய்
எழுந்துவர முடியவில்லை..



(தமிழன்பன் கவிதை) 

ஞாயிறு, ஜூன் 13, 2010

ஏழரை

என்னைநீ விட்டுப்போனால்
கவலையில்லை மகிழ்வேனடி
விரட்டாமல் விட்டுப்போனாய்
எனைப்பிடித்த ஏழரையென்று....



(தமிழன்பன் கவிதை) 

வியாழன், ஜூன் 10, 2010

நினைவுகள்

காலங்கள் கடந்தாலும்
கடல்சேரா நதிகளாய்
தேங்கியபடி என்னுள்
காதலின் நினைவுகள்.


(தமிழன்பன் கவிதை) 

செவ்வாய், ஜூன் 08, 2010

புன்னகை

பளிங்கினில் முத்தென
சிந்திய புன்னகையில்
கவிழ்ந்தது மனது
கரைசேர்ந்தது நான்.



(தமிழன்பன் கவிதை) 

திங்கள், ஜூன் 07, 2010

பிறவி

உனக்கெனப் பிறப்பதற்கு
பின்னையொரு பிறவியுமில்லை
உன்னையும் துறந்துவிட
நானொன்றும் துறவியுமில்லை..


(தமிழன்பன் கவிதை) 

சனி, ஜூன் 05, 2010

சாபங்கள்

நல்ல உறவுகள்
கடவுள் கொடுத்த வரமாம்
எனக்கு மட்டும் ஏன்
இத்தனை சாபங்கள்...


(தமிழன்பன் கவிதை) 

புதன், ஜூன் 02, 2010

எறி(ரி)கல்

கண்ணாடி இதயத்தில்
கல்லெறிந்து போகாதே
உடைவதென்னவோ நான்தான்
உள்ளிருப்பது நீயடி...


(தமிழன்பன் கவிதை) 

செவ்வாய், ஜூன் 01, 2010

நினைவுகள்

வருவதும் போவதும்
வராமலே போவதும்
நீதானடி -உன்
நினைவுகள்
எப்போதும்
என்னோடுன்தான்..

(தமிழன்பன் கவிதை) 

ஞாயிறு, மே 30, 2010

காரணம்

என் கவிதைகளுக்கு
காரணம் கேட்கிறார்கள்
என் கவிதையான கவிதை -நீ
என்று அறியாமல்...


(தமிழன்பன் கவிதை) 

வெள்ளி, மே 28, 2010

நிலா

அன்பே இனி
மொட்டைமாடியில் தூங்காதே
போகவே மாட்டேனென
அடம் பிடிக்கின்றதடி
நிலா!



(எங்கேயோ படித்த கவிதை)

விருப்பம்

உன் விருப்பங்களை
ஒருபோதும்
தடைசெய்ததே இல்லை..
உன்னை மறந்துவிடச்சொல்லும்
இந்த நிமிடத்திலும்...


(தமிழன்பன் கவிதை) 

அகக்கண்

உன் பார்வை
அம்புகள் தைத்ததில்
குருடாகிப் போயின
என் அகக்கண்கள்..



(எங்கேயோ படித்த கவிதை)

புதன், மே 05, 2010

சுவடுகள்

உன் பாதச் சுவட்டில்
என் பாதம் பதிக்கக்கவும்
விருப்பமில்லை..
உன் சுவடுகள்
அழிவதைக்கூட
பொறுக்க முடியாதடி
என்னால்...

(தமிழன்பன் கவிதை) 

சனி, மே 01, 2010

பார்வை

எத்தனை முறை
பார்த்தாலும்
தோற்று போகிறேன்..
அவளின்
ஒரே பார்வையில் ..

(எங்கேயோ படித்த கவிதை)

செவ்வாய், ஏப்ரல் 20, 2010

பாலைவனசோலை

நீயில்லாத
இந்தசோலையில்
பூக்களும் பனித்துளிகளும்
சிறகிலாமலே பறந்துவிட்டன
பாலைவன சோலைஎன!


(தமிழன்பன் கவிதை) 

கொள்ளி

வாரிசுகளை நம்பாமல்
தனக்குத் தானே
கொள்ளி!
உதட்டிடுக்கில்
வெண்சுருட்டு...



 (தமிழன்பன் கவிதை)
MyFreeCopyright.com Registered & Protected