skip to main
|
skip to sidebar
அன்றில்
Anril
திங்கள், ஜூன் 21, 2010
தவிப்பு
எங்கே இசைத்தாலும்
நீயே மீட்டுவதாய்
தவிக்குதடி மனது
தர்க்கமே இல்லாமல்- என்
தாளங்களை போலவே...
(தமிழன்பன் கவிதை)
காலம்
கரைகிறது காலம்
உன் நினைவை
மட்டும்
உருகாமல்
உறையவிட்டு...
(தமிழன்பன் கவிதை)
தியானம்
மனதொடுக்கி
நிலைமறந்து
தியானிக்கிறாய் நீ
திசைமாறுதடி
என் திடம்...
(தமிழன்பன் கவிதை)
முரண்
நிழல் சூடானவெயிலாய்
தூறல் பெருமழையாய்
மென்பனி கடுங்குளிராய்
அமைதியான பேரிரைச்சலாய்
நானாக நீ என்னுள்ளே ...
(தமிழன்பன் கவிதை)
ஞாயிறு, ஜூன் 20, 2010
ஈரம்
நீலம் மறந்த வானம்
நில்லாது தூவும் மழை
குடையில்லாமல் - நீ
நனைந்தபடி என் மனது..
(தமிழன்பன் கவிதை)
உளவு
உளவறியும்
உன்பார்வையால்
என் களவறிந்து ஊர்
சொல்லும் நீ -என்
உளமறியாததேனோ..?
(தமிழன்பன் கவிதை)
சனி, ஜூன் 19, 2010
காலம்
எதிர்காலம் நிகழ்காலம் கடந்தகாலம்
என காலங்களை கடந்தகாலம் அன்பே- நீ
எக்காலத்தில் வந்தாயோ நான் அறியேன்
நீ வந்து போனது எனது கஷ்டகாலம்
....
(தமிழன்பன் கவிதை)
புதன், ஜூன் 16, 2010
வழி
பெண்ணழகு இதுவலவோ என நான்
பின்னழகு பார்த்து பின்சென்று பின்
என்னழகை எண்ணி ஒருகணம் நின்று
வழிகண்டு வந்தேன் பின் வந்தவழி....
(தமிழன்பன் கவிதை)
செவ்வாய், ஜூன் 15, 2010
அவன்
அது எள்ளி நகைத்தது அவனை
அதுகண்டு நகைத்தன-அவைகளும்
தெரிந்திருக்க நியாயமில்லைதான் ஒருநாளில்
வரலாறும் அவன்வாசலில் வாலாட்டுமென்று...
(தமிழன்பன் கவிதை)
திங்கள், ஜூன் 14, 2010
துடிப்பு
உன்நினைவில் விழுந்தமனம்
விடுபடத்தான் துடிக்கிறது
கவிழ்ந்துவிட்ட கரப்பானாய்
எழுந்துவர முடியவில்லை..
(தமிழன்பன் கவிதை)
ஞாயிறு, ஜூன் 13, 2010
ஏழரை
என்னைநீ விட்டுப்போனால்
கவலையில்லை மகிழ்வேனடி
விரட்டாமல் விட்டுப்போனாய்
எனைப்பிடித்த ஏழரையென்று....
(தமிழன்பன் கவிதை)
வியாழன், ஜூன் 10, 2010
நினைவுகள்
காலங்கள் கடந்தாலும்
கடல்சேரா நதிகளாய்
தேங்கியபடி என்னுள்
காதலின் நினைவுகள்.
(தமிழன்பன் கவிதை)
செவ்வாய், ஜூன் 08, 2010
புன்னகை
பளிங்கினில் முத்தென
சிந்திய புன்னகையில்
கவிழ்ந்தது மனது
கரைசேர்ந்தது நான்.
(தமிழன்பன் கவிதை)
திங்கள், ஜூன் 07, 2010
பிறவி
உனக்கெனப் பிறப்பதற்கு
பின்னையொரு பிறவியுமில்லை
உன்னையும் துறந்துவிட
நானொன்றும் துறவியுமில்லை..
(தமிழன்பன் கவிதை)
சனி, ஜூன் 05, 2010
சாபங்கள்
நல்ல உறவுகள்
கடவுள் கொடுத்த வரமாம்
எனக்கு மட்டும் ஏன்
இத்தனை சாபங்கள்...
(தமிழன்பன் கவிதை)
புதன், ஜூன் 02, 2010
எறி(ரி)கல்
கண்ணாடி இதயத்தில்
கல்லெறிந்து போகாதே
உடைவதென்னவோ நான்தான்
உள்ளிருப்பது நீயடி...
(தமிழன்பன் கவிதை)
செவ்வாய், ஜூன் 01, 2010
நினைவுகள்
வருவதும் போவதும்
வராமலே போவதும்
நீதானடி -உன்
நினைவுகள்
எப்போதும்
என்னோடுன்தான்..
(தமிழன்பன் கவிதை)
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Search
அன்றில்கள்
பக்கங்கள்
முகப்பு
Blog Archive
►
2013
(2)
►
ஏப்ரல்
(2)
►
2012
(1)
►
செப்டம்பர்
(1)
►
2011
(3)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(2)
▼
2010
(27)
►
ஜூலை
(2)
▼
ஜூன்
(17)
தவிப்பு
காலம்
தியானம்
முரண்
ஈரம்
உளவு
காலம்
வழி
அவன்
துடிப்பு
ஏழரை
நினைவுகள்
புன்னகை
பிறவி
சாபங்கள்
எறி(ரி)கல்
நினைவுகள்
►
மே
(6)
►
ஏப்ரல்
(2)
►
2009
(48)
►
ஜூன்
(2)
►
மே
(2)
►
ஏப்ரல்
(10)
►
மார்ச்
(34)
எனது வலைப்பதிவு பட்டியல்
வட்டு
நரேந்திர மோடி பாடல்
11 மாதங்கள் முன்பு
கணித்தமிழ்
Samsung Galaxy Watch Active review: Excellent design, good choice for fitness / in tamil
4 ஆண்டுகள் முன்பு
அன்றில்
நீயாக நான்
11 ஆண்டுகள் முன்பு
தமிழ் உருநகரல்
கணிப்பையன்
13 ஆண்டுகள் முன்பு
முகமிழந்தவன்
யாரிவள்..?
13 ஆண்டுகள் முன்பு
சுவர்த்தாள்கள்
ஈழம் சுவர்த்தாள்கள்
15 ஆண்டுகள் முன்பு
இன்று
widget
பக்கங்கள் பார்க்கப்பட்டது