ஞாயிறு, மே 30, 2010

காரணம்

என் கவிதைகளுக்கு
காரணம் கேட்கிறார்கள்
என் கவிதையான கவிதை -நீ
என்று அறியாமல்...


(தமிழன்பன் கவிதை) 

வெள்ளி, மே 28, 2010

நிலா

அன்பே இனி
மொட்டைமாடியில் தூங்காதே
போகவே மாட்டேனென
அடம் பிடிக்கின்றதடி
நிலா!



(எங்கேயோ படித்த கவிதை)

விருப்பம்

உன் விருப்பங்களை
ஒருபோதும்
தடைசெய்ததே இல்லை..
உன்னை மறந்துவிடச்சொல்லும்
இந்த நிமிடத்திலும்...


(தமிழன்பன் கவிதை) 

அகக்கண்

உன் பார்வை
அம்புகள் தைத்ததில்
குருடாகிப் போயின
என் அகக்கண்கள்..



(எங்கேயோ படித்த கவிதை)

புதன், மே 05, 2010

சுவடுகள்

உன் பாதச் சுவட்டில்
என் பாதம் பதிக்கக்கவும்
விருப்பமில்லை..
உன் சுவடுகள்
அழிவதைக்கூட
பொறுக்க முடியாதடி
என்னால்...

(தமிழன்பன் கவிதை) 

சனி, மே 01, 2010

பார்வை

எத்தனை முறை
பார்த்தாலும்
தோற்று போகிறேன்..
அவளின்
ஒரே பார்வையில் ..

(எங்கேயோ படித்த கவிதை)
MyFreeCopyright.com Registered & Protected